எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

90 - Al-Balad

 90 - ஸூரத்துல் பலத்(நகரம்) (Al-Balad - البلد)


90:1 - இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.


90:2 - நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,


90:3 - பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,


90:4 - திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.


90:5 - 'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா.?


90:6 - "ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.


90:7 - தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?


90:8 - அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?


90:9 - மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?


90:10 - அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.


90:11 - ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.


90:12 - (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.


90:13 - (அது) ஓர் அடிமையை விடுவித்தல்-


90:14 - அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.


90:15 - உறவினனான ஓர் அநாதைக்கோ,


90:16 - அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).


90:17 - பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.


90:18 - அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.


90:19 - ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்".


90:20 - அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.


       Back                    Home                   Next

No comments

Powered by Blogger.