எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

89 - Al-Fajr

 89 - ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை) (Al-Fajr - الفجر)


89:1 - விடியற் காலையின் மீது சத்தியமாக,


89:2 - பத்து இரவுகளின் மீது சத்தியமாக,


89:3 - இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,


89:4 - செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,


89:5 - இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா.?


89:6 - உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா.?


89:7 - (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,


89:8 - அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.


89:9 - பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)


89:10 - மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)


89:11 - அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.


89:12 - அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.


89:13 - எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.


89:14 - நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.


89:15 - ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.


89:16 - எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.


89:17 - அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.


89:18 - ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.


89:19 - இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.


89:20 - இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.


89:21 - அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,.


89:22 - உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,


89:23 - அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.


89:24 - "என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.


89:25 - ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.


89:26 - மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.


89:27 - (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!.


89:28 - நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.


89:29 - நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.


89:30 - மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).


       Back                    Home                   Next


No comments

Powered by Blogger.