எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

நெய் சோறு


தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்

வெங்காயம் - ஒன்று

பான்டன் இலை - ஒரு துண்டு

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

தயிர் - 2 தேக்கரண்டி

மல்லித் தழை - சிறிது

நெய் (அ) வெண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

தண்ணீர் - 3 கப்

தாளிக்க:

பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா ஒன்று


செய்முறை:

🔘 வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். மல்லித் தழையை சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

🔘 ஒரு பாத்திரத்தில் நெய் (அ) வெண்ணெயை உருக்கி, அதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும்.

🔘 தாளித்தவற்றுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

🔘 பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தயிர் மற்றும் மல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

🔘 அரிசியைக் களைந்து ரைஸ் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு போடவும்.

🔘 அதனுடன் தாளித்தவற்றைச் சேர்த்து குக்கரை மூடி ஆன் செய்யவும்.

🔘 கொதிக்கும் போது இடையில் ஒரு முறை குக்கரைத் திறந்து கிளறிவிடவும்.

🔘 பிறகு மூடி போட்டு மீண்டும் வேகவிடவும். குக்கர் வாமில் வந்ததும் சிறிது நேரம் அதிலேயே வைத்திருந்து எடுக்கவும்.

🔘 கமகம நெய் சோறு ரெடி.

No comments

Powered by Blogger.