எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

77 - Al-Mursalaat

 77 - ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை) (Al-Mursalaat - المرسلات)


77:1 - தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக.


77:2 - வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-


77:3 - (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-


77:4 - (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-


77:5 - (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-


77:6 - (அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)


77:7 - நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.


77:8 - இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-


77:9 - மேலும், வானம் பிளக்கப்படும் போது-


77:10 - அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-


77:11 - மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-


77:12 - எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?


77:13 - தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.


77:14 - மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?


77:15 - (நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.


77:16 - முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?


77:17 - பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.


77:18 - குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).


77:19 - பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


77:20 - அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?


77:21 - பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.


77:22 - ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.


77:23 - இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.


77:24 - பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


77:25 - பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?


77:26 - உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).


77:27 - அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.


77:28 - பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


77:29 - "நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).


77:30 - மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.


77:31 - (அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.


77:32 - நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.


77:33 - நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.


77:34 - பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


77:35 - இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.


77:36 - அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.


77:37 - பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


77:38 - இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).


77:39 - எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.


77:40 - பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


77:41 - நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.


77:42 - இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.


77:43 - "நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).


77:44 - நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.


77:45 - பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


77:46 - (பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.


77:47 - பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


77:48 - 'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.


77:49 - பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


77:50 - எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?


      Back                    Home                    Next

No comments

Powered by Blogger.